ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிடுக
22/01/2015 கண்ணில் கருப்பு துணி கட்டி மாநிலம் முழுவதும்
ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு
முறையாக சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
பிஎஸ்என்எல் ஊழியர்கள்,
ஒப்பந்த தொழிலாளர்கள் கண்ணில் கருப்பு
துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில்
பணிபுரியும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பிரதி மாதம் 7ம்தேதிக்குள் சம்பளம் வழங்குவதை உத்திரவாதப்படுத்திட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமலும், சட்ட சலுகைகளை அமல்படுத்தாமலும் அலட்சியம் காட்டி வரும் சென்னை
இன்னோவெட்டி நிறுவத்திற்கு ஒப்பந்தம் வழங்கக்கூடாது.
இஎஸ்ஐ., பிஎப் ஆகியவற்றை ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு முறைபடுத்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு
ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு மையங்களில் வியாழனன்று கண்களில்
கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவை மேட்டுப்பாளையம்
சாலையில் உள்ளபிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிஎஸ்என்எல்
ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. சந்திரசேகரன், ஒப்பந்தஊழியர்
சங்கத்தின் மாவட்டதுணைத் தலைவர் எம்.பி. வடிவேல் ஆகியோர்தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல்ஊழியர்
சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் என்.பி.ராஜேந்திரன், எம். மதனகோபால், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்
மாவட்ட துணை செயலாளர்கள் பழனிசாமி, விஜயன் ஆகியோர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன்
நிறைவுரை ஆற்றினார்
மதுரை .
அருமைத்
தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான, சட்டப்படியான சம்பளத்தை
பிரதிமாதம் 7-ம். தேதிக்குள் வழங்க வேண்டுமென்ற உத்தரவு இருந்தும்,
டிசம்பர்-2014 சமபத்தை இது நாள் வரை வழங்காததை கண்டித்து
மாநிலந்
தழுவிய அறைகூவலுக்கு இணங்க 22.01.2015 அன்று மதுரை SSA-யில் MADURAI -
DINDUGUL - THENI ஆகிய 3 இடங்களிலில் BSNLEU மற்றும் TNTCWU இரு
சங்கங்கள் சார்பாக கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம் மிக சக்தியாக நடைபெற்றது ...
மதுரையில் தல்லாகுளம்,
லெவல்-4, வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர்கள், கே. விரபத்திரன்
, எஸ். மனுவேல் பால்ராஜ் ஆகிய இருவரும் கூட்டுத் தலைமை ஏற்று நடத்தினர்.
கோரிக்கைகளை விளக்கி தோழர்கள், என். சோனை முத்து, எ. அன்பழகன் ஆகியோர்
பேசினர். ஆர்பாட்டத்தில் தோழர் எஸ். சூரியன் நிறைவுரை நிகழ்த்தினார்.
தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற கூட்டம் இனிதே கூட்டம் நிறைவுற்றது.
திண்டுக்கலில்
நடைபெற்ற கண்கட்டி ஆர்பாட்டத்திற்கு தோழர். எ. ஞான சுந்தரம் தலைமை தாங்க,
தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா, சி.செல்வின் சத்தியராஜ், ஜே. ஜோதிநாதன், எஸ்.
பரிமள ரெங்கராஜ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.
தோழர்.எ.குருசாமி நன்றி கூறி ஆர்பாட்டத்தை முடித்து வைத்தார்.
நாகர்கோயில்

தர்மபுரி
22/1/2015 அன்று TNTCWU மற்றும் BSNLEU இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்.
ஒப்பந்த
ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் கட்டாயம் வழங்க வேண்டும்
என்ற கோரிக்கையை முன்வைத்து கண்ணை கட்டி கொண்டு ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
திருநெல்வேலி

திருநெல்வேலி, ஜன. 22-பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஒப்பந்தத்
தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக்
கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.திருநெல்வேலி ஸ்ரீபுரம் பி.எஸ்.என்.எல்.கிளை அலுவலகம் முன்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடுதொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்
சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்யு மாவட்ட
உதவிச் செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் கனகமணி, சுவாமிநாதன்,பிச்சுமணி
ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.இந்த
ஆர்ப்பாட்டத்தில் சுந்தர்ராஜன், சேவியர், திவ்யா உட்பட ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.
தஞ்சையில்
ஓப்பந்த ஊழியர்களுக்கான சம்பளம் பட்டுவாடா உடனே வழங்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.01.2015
தஞ்சையில்
ஒப்பந்த ஊழியர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.01.2015 அன்று
நடைபெற்றது.அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் மற்றும் நிறந்தர ஊழியர்களும்
கலந்துகொண்டனர் BSNLEU தலைமையில் நடைபெற்றது.
திருவாரூரில்
நடைபெற்ற கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்